Published On: Friday, February 24, 2012
அமெரிக்காவில் இரு உலங்கு வானூர்திகள் மோதல்

அமெரிக்காவின் அரிசோனாவில் புதன் இரவு இரு உலங்கு வானூர்தி கள் மோதிய விபத்தில் ஏழு அமெரிக்க கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கடற்படையின் பறக்கும் பிரிவைச் சேர்ந்த கோப்ரா மற்றும் ஹ்யூ ரக உலங்கு வானூர்திகள் ஜுமா நகரின் அருகில் இராணுவப் பயிற்சியை மேற்கொண்டிருந்த வேளை இந்த அனர்த்தம் நடந்ததாக அமெரிக்கக் கடற்படை தெரிவித்தது.
இவ்விபத்து ஜுமா பயிற்சி வளாகத்திலிருந்து தொலைதூரத்தில் நடந்துள்ள அதேவேளை விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து விசாரணை பல வழிகளில் இடம்பெறுகிறது. கடந்த செப்டெம்பரில் கலிபோர்னியாவில் ஓர் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதில் இரு கடற்படையினர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

