Published On: Friday, February 10, 2012
தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி ஆரம்பப் பிரிவு மாணவர்களின் இல்ல மெய்வன்மைப் போட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கல்லூரி அதிபர் வேல் சிவானந்தன் தலைமையில் நடைபெறுகிறது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை குழந்தை வைத்திய நிபுணர் இரா. மருதயினாரும் சிறப்ப விருந்தினர்களாக வலிகாமம் கல்வி வலய உடற்கல்வி அசிரிய ஆலோசகர் கோசலை குலபாலசிங்கம்மும் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வில் அம்பாலிகை மருதயினார் பரிசில்களை வழங்கி கௌரவிக்கவுள்ளார்.