எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, February 13, 2012

தயாரிப்பாளர் 'தீபிகா படுகோன்' மீது புகார்

Print Friendly and PDF


பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோன் மீது தயாரிப்பாளர் ஒருவர், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பாலிவுட்டில் ஓம் சக்தி ஓம் திரைப்படத்தின் மூலம் ஷாருக்கானுடன் இணைந்து நடித்து தீபிகா படுகோன் பிரபலமானார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழும் தீபிகா படுகோன் மீது தயாரிப்பாளர் ரமேஷ் தரணி புகார் ஒன்று கொடுத்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் ரமேஷ் தரணி ரேஸ்-2 என்ற இந்தி படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மும்பையில் உள்ள சினிமா கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீபிகா படுகோன் மீது புகார் கொடுத்துள்ளார்.

நான் டிப்ஸ் பிலிம்ஸ் சார்பில் ரேஸ் 2 இந்திப் படத்தை தயாரித்து வருகிறேன். இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அவர் ஒரு வாரம் படப்படிப்பில் பங்கேற்று நடித்துக் கொடுத்தார். இப்போது திடீர் என்று ரேஸ் 2 படத்திலிருந்து விலகிக் கொள்வதாக கூறுகிறார்.

ஹாலிவுட் பட வாய்ப்பு வந்ததைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை எடுத்து இருக்கிறார். இதனால் ரேஸ் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற முடியாமல் தடைபட்டு, எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே தீபிகா படுகோன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ரமேஷ் தரணி கூறியுள்ளார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452