எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Thuruvam
துருவம்
செய்திகள் • உடனுக்குடன்
THURUVAM
NEWS
MENU
Published On: Monday, February 27, 2012

தர்மபுரியில் 2 தலையுடன் அதிசய கன்றுக்குட்டி

Print Friendly and PDF


தர்மபுரி ஏமகுட்டியூர் கிராமத்தில் 2 தலையுடன் அதிசய கன்றுக்குட்டி பிறந்தது. தர்மபுரி ஏமகுட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன்(35). விவசாய கூலிதொழிலாளி. இவர் கால்நடைகள் வளர்த்து வருகிறார். இவர் வளர்க்கும் பசு ஒன்று சினை பிடித்திருந்தது. நேற்று காலை அந்த மாடு 2 தலையுடன் கூடிய கன்றை ஈன்றது. இதுகுறித்த தகவல் கிராம மக்களிடையே பரவியது. ஏராளமானோர் அதிசய கன்றுக்குட்டியை பார்ப்பதற்காக கூடினர். 

அதிசய கன்றுக்குட்டி பிறந்த 2 மணி நேரத்தில் இறந்துவிட்டது. கிராம மக்கள் அந்த கன்றுக்குட்டிக்கு இறுதி சடங்குகளை நடத்தினர். சந்தனம், குங்குமம் வைத்து, மாலை அணிவித்து சடங்குகளை செய்தனர். இதுகுறித்து கால்நடை மருத்துவர் கூறும்போது, ‘‘10 ஆயிரம் கன்றுக்குட்டிகளில் ஒன்று இப்படி அதிசயமாக பிறப்பது உண்டு. அப்படி பிறக்கும் கன்றுகுட்டிகள் நீண்டநேரம் உயிருடன் இருக்காது. உடல் ரீதியாக குறைபாடுடன் பிறக்கும் கன்று குட்டிகள் சிறிது நேரத்தில் இறந்துவிடும்,‘‘ என்றார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452