Published On: Sunday, March 04, 2012
ஐ.தே.க. புனரமைப்புக்கு நிதி சேகரிக்கும் நிகழ்வுகளில் ரணில்
(புத்தளம் செய்தியாளர்)
புத்தளம் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி புனரமைப்பு மற்றும் சேதமாக்கப்பட்ட கட்சி தலைமையகமான ஸ்ரீகொத்தாவின் புனரமைப்புக்கான நிதி சேகரிக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தளத்திற்கு விஜயம் செய்தார்.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் கிங்ஸ்லி லாலின் க்றீன் கார்டன் ஹோட்டலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிரேசன் பெரேரா, வடமேல் மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சமல் உட்பட கட்சியின் பிரமுகர்கள், பிரதேச அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.





