எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Thursday, June 12, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, March 05, 2012

ஜெயலலிதாவின் இலங்கைக்கு எதிரான கூற்றுக்கு கண்டனம்

Print Friendly and PDF


அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடருக்கு கொண்டுவரவிருந்த கண்டனப் பிரேரணைக்கு இந்திய அரசாங்கம் தனது ஆதரவை அளிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்தை இஸ்லாமிய ஒருமைப்பாட்டின் முன்னணியின் தலைவர் ரியாஸ் சாலி கண்டித்துள்ளார். இலங்கைக்கு எதிராக செயற்படுவதற்குப் பதில் ஜெயலலிதா உண்மையிலேயே எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளை தமிழ்நாட்டில் இருந்தும் செயல் இழக்கச் செய்தமைக்காக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அதற்கு மாறாக இவ்விதம் நடந்து கொள்வது கண்டனத்துக்குரிய செயல் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பயங்கரவாதத்தை பூண்டோடு அழித்துக் கட்டுவதற்கு இந்திய அரசாங்கம் செய்த உதவிகளை நாம் மறக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அல்ஹாஜ் ரியாஸ் சாலி இந்தியாவும் தமிழ் நாட்டு அரசாங்கமும் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி ஈட்டிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜெயலலிதா கடந்தகால நிகழ்வுகளை இலகுவில் மறந்துவிடுகின்றார். எவ்விதம் ராஜீவ் காந்தியை எல்.ரீ.ரீ.ஈ. கொலை செய்தது என்பதை நாம் அவருக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் என்று அவர் கூறினார். எங்கள் நாட்டுப் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக் கொள்வோம்.

தயவு செய்து வெளிநாடுகள் இதில் தலையிடக்கூடாது என்று தெரிவித்த ரியாஸ் சாலி, நாம் தாய்நாட்டுக்கு ஏற்புடைய ஒரு சமாதானத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். அல்குர்ஆனில் கூறியிருப்பதைப் போன்று நாட்டு மக்கள் நாட்டுப்பற்றுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். இஸ்லாமிய ஒருமைப்பாட்டு முன்னணி கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி அவர்களுக்கு பிரார்த்தனை ஒன்றையும் நடத்தியது.

Related News

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452