Published On: Tuesday, March 06, 2012
கல்முனை தௌஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு
(நப்றிஸ்)
கல்முனை ஜமாஅத் அன்சாரிஸ் ஸுன்னதில் முஹம்மதிய்யா தௌஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு முஹம்மதிய்யா பள்ளிவாசலில் அண்மையில் இடம்பெற்றது. கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஊழியர்கள், வைத்திய அதிகாரிகள் மற்றும் அத்தியேட்சகர் டாக்டர் ஏ.எம். நஸீர் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரதேசவாசிகள் இந்நிகழ்வில் இரத்ததானம் வழங்கினர். இப்பள்ளிவாசல் நிர்வாகத்தினர் ஒவ்வொரு வருடமும் இவ்வாறான இரத்ததான நிகழ்வினை ஏற்பாடு செய்வது குறிப்பிடத்தக்கது.





