Published On: Sunday, March 04, 2012
பாடசாலை சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

(முஹம்மட் பிறவ்ஸ், ப்ரியா அன்டனி)
பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை கொண்டு வரவுள்ளதாக தனியார் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, பாடசாலை போக்குவரத்து சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் வாகனங்களும் ஒரே நிறத்தில் இருக்கவேண்டும்.
கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் வாகன உரிமையாளர்களுக்கு தேசியக் கொள்கை செயல்படுத்தப்பட்டதன் பின்னர் டீசல் விலை அதிகரிக்கும் போதெல்லாம் கட்டணத்தை உயர்த்த முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். தற்போது பாடசாலை சேவையில் 44,000 தனியார் வாகனங்கள் ஈடுபடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

