Published On: Friday, March 09, 2012
ஜெ.வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தம்பதி கைது

(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக சென்னையில் ஒரு தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். போயஸ் கார்டனில் குண்டுவெடிக்கும் என போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது. இந்த தொலைபேசி அழைப்பு தஞ்சாவூரில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஜான்மைக்கேல் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர் திருவொற்றியூரில் வசித்து வந்ததாகவும், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தஞ்சாவூர் வந்ததாகவும், வெடிகுண்டு மிரட்டலில் மனைவிக்கும் பங்கு உண்டும் என்றும் அவர் போலீசில் தெரிவித்தார். இதையடுத்து அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார்.

