Published On: Friday, March 09, 2012
இணையத்தில் காஜல் பெயரில் மோசடி

நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் இன்டர் நெட்டில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வளைத் தளங்களை பயன்படுத்துகின்றனர். தங்களை பற்றிய விவரங்கள், போட்டோக்கள் போன்றவற்றை அவற்றில் போட்டு வைத்து ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுடன் தொடர்பு வைத்து கருத்து பரிமாறிக் கொள்கிறார்கள். இதனை சில சமூக விரோத கும்பல் மோசடியாகவும் பயன்படுத்துகின்றனர்.
நடிகர், நடிகைகள் பெயரில் போலி அக்கவுண்ட் துவங்கி ரசிகர்களுடன் அவர்கள் பேசுவது போல் தொடர்பு வைத்துள்ளார்கள். பல நடிகைகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது காஜல் அகர்வால் பெயரிலும் டுவிட்டரில் மோசடி நடக்கிறது. காஜல்அகர்வால் படங்களை அதில் போட்டு வைத்து ரசிகர்களுடன் காஜல்அகர்வால் பேசுவது போல் மோசடி கும்பல் பேசி வருகின்றனர்.
ஆபாச கேள்விகளுக்கு பதில் சொல்வது போன்றும் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதை உண்மை என்று நம்பி தொடர்பு வைத்துள்ளனர். பிரபல இந்தி நடிகர் நில்நிதின் முகேஷம் இது போல் தொடர்பு கொண்டு ஏமாந்துள்ளார். இது குறித்து காஜல் அகர்வால் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும் ஆவேசம் அடைந்தார்.
அவர் கூறியதாவது:-டுவிட்டர், பேஸ் புக் போன்ற சமூக வளைத்தளங்களில் நான் இல்லை. ஆனால் எனது பெயரை போலியாக பயன்படுத்தி மோசடி நடிக்கிறது. மோசடி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன். அவர்கள் யார் என்பதை கண்டு பிடிக்க முயற்சித்து வருகிறோம்.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

