Published On: Tuesday, October 18, 2011
பாடசாலை மாணவி மர்மாக மரணம்

குருநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெல, தக்மல்கொட மகா வித்தியாலய சாரணர் பிரிவிலிருந்து பயிற்சிக்காக ரன்டம்பே சென்ற 15 வயது மாணவி சந்தமாலி அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
ரன்டம்பே பயிற்சின்போது இரவு ஓய்வறைகளில் தூங்கிக் கொண்டிருக்கும்போது மாணவிகள் அறையில் ஒரு சத்தம் கேட்டு அனைத்து மாணவிகளும் விழத்துக்கொண்டனர் சந்தமாலியைத் தவிர. களைப்பின் காரணமாக சந்தமாலி நன்றாகத் தூங்கியுள்ளார் என்று நினைத்த சக மாணவிகள் அவளைத் தொந்தரவு செய்யவில்லை.
எனினும், காலை விடிந்த பின்னரும் விளத்துக்கொள்ளாததைக் கண்டு சக தோழிகள் உடனேயே மேலதிகாரிக்கு அறிவி்த்துள்ளனர். எனினும் அவர்கள் எழுப்பும்போது சந்தமாலியின் உயிர் பிரிந்திருந்தது.
பயிற்சிக்குச் செல்ல முன்னர் வைத்திய அதிகாரிகள் மூலம் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு தேகாரோக்கியம் உள்ளவர் சந்தமாலி என்று நற்சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறான மாணவி தனது உயிரைவிடக் காரணம் என்ன...? இந்தக் கேள்விக்குறிக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.
குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்