Published On: Sunday, February 19, 2012
எம்.சீ.எம்.ஷெரீப் எழுதிய ‘சுவடுகள் பாகம்-1’ நூல் வெளியீடு
(அபூ அஹ்மத்)
கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் எம்.சீ.எம்.ஷெரீப் எழுதிய ‘சுவடுகள் பாகம்-1’ நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் அந்நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. 3CD அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எம்.சாஹிர் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசிரியர் செ.யோகராசா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். நூல் அறிமுகவுரை கிண்ணியா பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஸீ.எம்.முஸம்மில், நூல் நயவுரை கலாபூசணம் எம்.எஸ்.அமானுல்லா ஆகியோர் நிகழ்த்தினர்.








