Published On: Wednesday, February 15, 2012
(அபூ அஹ்மத்)
திவிநெகும திட்டத்தின் கீழ் கிண்ணியா ஆயிலியடி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்தோட்டங்களின் அறுவடை விழா நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. ஆயிலியடி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சவீர் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர் ச. கிருஸ்ணேந்திரன், விவசாயப் போதனாசிரியர் எம்.ஜே.எம்.வாஜித், சமுர்த்தி முகாமையாளர் சந்திரசேகரன் உட்பட மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.