Published On: Sunday, February 12, 2012
(கிருத்தியன்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 28 இலட்சம் ரூபா செலவில் கல்முனை, சேனைக்குடியிருப்பு கிராமத்தில் நவீன முறையிலான தாய் மற்றும் சேய்க்கான சிகிச்சை நிலையத் திறப்பு விழா நேற்று சனிக்கிழமை கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரமேஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெப்பை ஆகியோர்கள் அதிதிகளாகக் கலந்து கொண்டு இந்நிலையத்தை திறந்து வைத்தனர். இவ்வைபவத்தில் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன் மத்திய மருந்தக வைத்திய அதிகாரி டாக்டர் எல்.புஸ்பலதா, உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் உட்பட உத்தியோகத்தர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.