Published On: Saturday, March 03, 2012
(சர்ஜுன்)
அம்பாரை மாவட்டத்தின் பிரபல்யமான இரு கல்லுாரிகள் அமைந்துள்ள கல்முனை ஸாஹிரா கல்லுாரி வீதி உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் செப்பனிடப்பட்டு வருகின்ற வடிகான் மற்றும் பாதையினை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம் .எஸ் உதுமாலெப்பை அதிகாரிகள் சகிதம் திடீர் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர். வடிகான் திட்டங்களை துரிதப்படுத்துமாறு அமைச்சர் வீதி அபிவிருத்தி திணைகளதின் அம்பாரை பிரம பொறியியலாளர் ரிஸ்விக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் அமைச்சர் மஹ்மூத் மகளிர் கல்லுாரி மற்றும் ஸாஹிறா கல்லுாரிக்கும் விஜயத்தினை மேற்கொண்டு பாடசாலையின் அபிவிருத்தி சம்பந்தமாக கல்லுாரி அதிபர்களிடம் கேட்டறிந்து கொண்டார். அமைச்சருடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துல்ஹர் நயீம், பொறியியலாளர் மக்புல் ஆகியோர்களும் விஜயம் மேற்கொண்டனர். அமைச்சர் அல்-மிஸ்பாஹ் வித்தியாலயத்தின் குறைபாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
கடற்கரை வீதியில் அமைக்கப்படும் பாலத்தினையும் கல்யாண வீதி அபிவிருத்தியினையும் பார்வையிட்ட அமைச்சர் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கேட்டு அவ்விடத்தில் அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அமைச்சரினால் 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகளையும் அமைச்சர் மேற்பார்வையிட்டார்.