Published On: Saturday, February 11, 2012
கடந்த வருடம் 10ஆம் மாதம் 20ஆம் திகதியன்று சேகு இஸ்மாயில் றபீக்கா என்னும் இலங்கைப் பணிப்பெண் ஒருவர் இறந்துள்ளதாக குவைத் அதிகாரிகள் குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர். அவர் 1968.04.12ஆம் திகதியன்று பள்ளம என்னும் இடத்தில் பிறந்துள்ளார். அவரது முகவரி உல்பத, கணேவல்பல, கெக்கிராவ எனக் கூறப்பட்டிருப்பினும் இதுவரை வேறு விபரமேதும் அறியப்படவில்லை என்பதுடன் அவரது சடலத்Zைத அடையாளம் காண்பிக்க இதுவரை எவரும் முன்வரவில்லை.
இறந்தவரின் பின் உரித்தாளர்களை தேடியறியும் பொருட்டு பொதுமக்களின் உதவியை வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு நாடுகின்றது. இறந்தவர் தொடர்பாக தகவல் ஏதும் தெரிந்தவர்கள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, தொலைபேசி, தொலைநகல் மற்றும் மின் அஞ்சலுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.
முகவரி: கொன்சியூலர் பிரிவு, வெளிவிவகார அமைச்சு, இல. 14, சேர் பாரொன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு 01. தொலைபேசி : 0112437635, 0114718972 தொலைநகல்: 0112473899.