எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Tuesday, July 15, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, February 11, 2012

மாலைதீவு பிரச்சினை தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு

Print Friendly and PDF


மாலைதீவில் தற்பொழுது தோன்றியிருக்கும் பிரச்சினைகள் அரசியல் ரீதியாக, அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு. மாலைதீவில் தோன்றியிருக்கும் குழப்பநிலையானது அந்நாட்டின் உள்விவகாரமாகும். இதில் எந்தவொரு வெளிநாடுகளும் தலையிடக் கூடாது. ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாலைதீவு அரசாங்கம் தனக்குள்ளேயே இப்பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இதுவே இலங்கையின் நிலைப்பாடாகும்.

தமது நாட்டில் தோன்றியிருக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கும் சக்தி அந்நாட்டு அரசாங்கத்திடம் இருக்கும் என்பதால், வெளிநாடுகளின் தலையீடுகள் தலையிடுவதை நாம் விரும்பவில்லை. மாலைதீவு இலங்கையுடன் மிகவும் நட்புக்கொண்ட நாடு என்ற ரீதியில் எந்த உதவிகளையும் மாலைதீவு அரசாங்கத்துக்கு வழங்க இலங்கை தயாராகவுள்ளது என்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவை பதில் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா கூறியதாவது, மாலைதீவு நாட்டின் உள்விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் தலையிட முடியாது. மாலைதீவு புதிய அரசாங்கத்துடனான உறவு தொடர்பில் ராஜதந்திர ரீதியில் தீர்மானிக்கப்படும். மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினருக்கு இலங்கை ஒன்றும் அன்னியமானதல்ல. இந்த வகையில் அக்குடும்பத்தினருக்கு அரசாங்கம் தஞ்சமளித்துள்ளது எனக் கூறினார். 

மாலைதீவு புதிய அரசாங்கத்துடன் இலங்கை தொடர்புகளை வைத்துக்கொள்ளுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கப் பதிலளித்த அமைச்சர், நான் அறிந்தவரை இந்தியா புதிய அரசாங்கத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. எமது உறவுகள் குறித்து ராஜதந்திர மட்டத்தில் முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவித்தார். மாலைதீவின் உள்கை விவகாரங்களில் இலங்கை அரசாங்கம்தலையிட முடியாது. எனினும் இலங்கையிலுள்ள அவரது மனைவி பிள்ளைகளுக்கு நாம் தஞ்சமளிப்போம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related News

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452