எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Sunday, June 15, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, February 22, 2012

நடுக்கடலில் சுற்றிவளைத்து இந்திய மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்

Print Friendly and PDF


(இந்தியாவிலிருந்து ஹமீது) 
நாகை அருகே உள்ள கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜாராம். விசைப்படகு உரிமையாளர். இவருக்கு சொந்தமான படகில் கோவிந்தராஜ் (வயது 47), வடிவேலு (வயது 25), ராஜசேக ரன் (வயது 18), சக்திவேல் (வயது 35), குருநாதன் (வயது 25), வையாபுரி (34), கலைமணி (29) மற்றும் உரிமையாளர் ராஜாராம் ஆகிய 8 பேரும் கடந்த 18ஆம் திகதி இரவு கோடியக் கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

வழக்கமாக அவர்கள் 4 முதல் 5 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கியிருந்து மீன்பிடித்துவிட்டு திரும்புவது வழக்கம். இதேபோல் 8 பேரும் நேற்று நள்ளிரவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 பைபர் படகுகளில் இலங்கை மீனவர்கள் 15 பேர் வந்தனர்.

அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தங்கள் படகுகளில் மறைந்து வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை எடுத்து நாகை மீனவர்களின் படகுகளில் வீசினர். இதில் 4 படகுகளில் தீப்பிடித்து எரிந்தது. இதனை சற்றும் எதிர்பாராத நாகை மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து வலைகளை சுருட்டிக்கொண்டு புறப்பட தயாரானார்கள். ஆனால், அவர்களை சுற்றிவளைத்த இலங்கை மீனவர்கள் நாகை மீனவர்களின் படகுகளில் தாவினர்.

பின்னர் கத்தி, அரிவாள், இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் வடிவேல், கோவிந்தன், வையாபுரி, சக்திவேல் ஆகிய 4 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. மற்ற மீனவர்களும் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் இலங்கை மீனவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த நாகை மீனவர்கள் 8 பேரும் காயங்களுடன் இன்று காலை கரை திரும்பினர். இதைப் பார்த்த நாகை மற்றும் கீச்சாங்குப்பம் மீன வர்கள் கடற்கரையில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. பின்னர் இதுபற்றி விசைப்படகு உரிமையாளர் ராஜாராம் மற்றும் கீச்சாங் குப்பம் பஞ்சாயத்தார்கள் நாகை டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காயம் அடைந்த மீனவர்கள் அனை வரும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இலங்கையில் போர் ஓய்ந்ததும் தமிழக மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடி தொழிலை செய்யலாம் என்று நினைத்தனர். ஆனால் சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கத்தான் செய்துள்ளது. சிங்கள கடற்படைக்கு பயந்த  காலம் போய்  தற்போது சிங்கள் மீனவர்களுக்கு பயப்படும் சூழ்நிலைக்கு தமிழக மீனவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வலியுறுத்தி இந்தியா சார்பில் பலமுறை வலியுறுத்தியும், நேரில் சென்று விளக்கியும், கண்டித்தும் தாக்குதல் மட்டும் நிற்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று காயம் அடைந்த மீனவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452