எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Wednesday, July 09, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, February 19, 2012

மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டங்கள்

Print Friendly and PDF


(நிஸார் ஜமால்தீன்) 
சி.என்.எல்.எப். சமூக விவகார மன்றத்தின் ஏற்பாட்டில் மல்டிலக் நிறுவன உரிமையாளர் அல்ஹாஜ் எம்.எம்.எம். மக்கீன் அவர்களின் அனுசரணையில் அட்டாளைச்சேனை பிரதேச க.பொ.த (உ/த) விஞ்ஞானப் பிரிவு மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதுதொடர்பான 3ஆம் கட்ட கலந்துரையாடல் அண்மையில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்றது. 

அமைப்பின் தலைவர் எம். முஹம்மட் நௌஷாட் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மட்டு மாவட்ட நீதவான் என்.எம்.எம். அப்துல்லாஹ், ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.கே.எம். இப்றாஹீம், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான யு.எம். வாஹிட், எஸ்.எல்.ஏ. றசாக் மற்றும் விரிவுரையாளர் எம்.எச்.எம். மின்வர் அதிபர் எம்.ஐ.எம். சலாம், உப அதிபர் ஏ.எல்.ஏ. பத்தாஹ், அமைப்பின் ஆலோசகர் எம்.ஏ. பௌசுர் ரஹ்மான், செயலாளர் எச்.எம். றிப்னாஸ், பொருளாலர் ஏ.சீ.எம். அஸாம், அமைப்பாளர் ஏ.சீ.எம். றிழா உட்பட மாணவர்களது பெற்றோர்களும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் விஞ்ஞானப்பிரிவு முதலாம் வருட மாணவர்களுக்கான மாலைநேர வகுப்புகள் ஏற்பாடு செய்வதெனவும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான விஷேட மாதிரி வினாப்பத்திர பயிற்சி வழங்குவதெனவும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக்கொண்டு இவ்விரு வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டதோடு மேலதிக வகுப்புகளுக்காக கல்முனைக்குச் செல்கின்ற மாணவர்களின் இரவுநேர போக்குவரத்து பிரச்சினையை நிவர்த்தி செய்யும்பொருட்டு இவ்வமைப்பினால் இலவச தனியார் பஸ் சேவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சி.என்.எல்.எப். இன் இவ்வாறான வேலைத்திட்டங்கள் அட்டாளைச்சேனையின் கல்வி வளர்ச்சியில் புதியதோர் புரட்சியை ஏற்படுத்தக்கூடியதெனவும் வரவேற்கத்தக்க சிறந்த முயற்சி எனவும் பெற்றோர்கள், கல்விமான்கள், கருத்து தெரிவிக்கின்றனர். சி.என்.எல்.எப். அமைப்பிற்கும் மல்டிலக் நிறுவன உரிமையாளருக்கும் இப்பிரதேச கல்விமான்களும் இப்பிரதேச மக்கள் தங்களது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.


அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452