Published On: Saturday, February 11, 2012
(ஐ.எம்.பாயிஸ்)
நிந்தவூர் காசிபுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்கள் தமது கல்லூரியின் நடப்பு நிர்வாகத்தினை மாற்றுக்கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்தினை விட்டு வெளியேறிய மாணவர்கள் நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சென்று பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் தமது வேண்டுகோளை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து தற்போதைய கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கி கல்லூரியினை தற்காலிகமாக முடியுள்ளது.
இதன் காரணமாக ஊர் பிரமுகர்களும் மார்க்க அறிஞர்களும் தமது ஆழ்ந்த கவலையினை வெளியிட்டுள்ளனர். 1981ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ் அரபுக் கல்லூரி கிழக்கிலங்கையில் பல நூற்றுக்கணக்கான மார்க்க அறிஞர்களை தந்துள்ளது. சமூக ஆர்வலர்கள் இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு கண்டு மீண்டும் உடன் கல்லூரியினை உரியவர்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.