Published On: Wednesday, February 22, 2012
(ஸர்ஜுன்)
பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் தவிசாளரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல். அதாஉல்லா தலைமையில் நடைபெற்றது. பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனம் வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மஜீட், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். தௌபீக், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் வீ.எஸ்.ஏ.பாசித், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.பதுர்கான் மற்றும் திணைக்கள உயர் அதிகாரிகளும் பிரதேச அமைப்புக்களின் பிரதி நிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டர்.