எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Thursday, June 19, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, March 01, 2012

இலங்கைக்கு எதிரான வல்லரசுகளின் செயற்பாடுகளை முறியடிக்க ஈரான் உதவும்

Print Friendly and PDF


(எஸ்.ஆர்.எம்.எம். இர்ஷாத்) 
இலங்கைக்கு எதிராக மேற்கத்திய வல்லரசுகள் சில முன்னெடுக்கும் செயற்பாடுகளை தோல்வியடையச் செய்ய ஈரான் எல்லா சந்தரப்பங்களிலும் இலங்கைக்கு உதவுமென ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் சலாஹி இலங்கை அமைச்சர்கள் குழுவினரிடம் தெரிவித்துள்ளதாக ஜெனீவா சென்றுள்ள இலங்கையின் கைத்தொழில், வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் திங்கட்கிழமை ஆரம்பமான ஜக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட்டத்தினையடுத்து, அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் ஈரான் வெளியுறவு அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார்.

இலங்கையும் ஈரனும் மிகவும் நெருங்கிய நட்பு நாடுகளாகும். பல துறைகளில் இரு நாடுகளும் மிகவும் நெருக்கமான செயற்பாடுகளை கொண்டதாக இருப்பதால், அண்மைய இலங்கை நாட்டின் முன்னேற்றம் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக காணப்படுவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சலாஹி இக்குழுவினரிடம் எடுத்துரைத்துள்ளார். அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் தற்போதை முன்னேற்றம் பற்றியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண மற்றும் வாழ்வாதார செயற்பாடுகள் உச்ச நிலையில் முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்து அமைச்சர்கள் மேலும் விளக்கமளித்தாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்

ஈரான் தமது ஆதரவையும் தம்மோடு நெருக்கமாக செயற்படும் ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அங்கத்துவ நாடுகளிடமும் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை வலுவிழக்கச் செய்யும் வகையில் செயற்படுவதற்கான தெளிவான விளக்கங்களையும் வழங்குவதாக வெளியுறவு அமைச்சர் சலாஹி பிரதி நிதிகளிடம் உறுதியளித்துள்ளார். அதேவேளை, சவுதி ஆரேபிய அமைச்சரை இலங்கை அமைச்சர்கள் சந்தித்து இலங்கையின் நியாயங்களை எடுத்துரைத்ததுடன் பேரவையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் நாடுகள் இலங்கையின் பக்கம் ஆதரைவை வழங்க வேண்டிய காரணங்களை தெளிவுபடுத்தியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் ஜெனீவா பேரைவைக் கூட்டத்திற்கு வருகைத் தந்த தாய்லாந்து நாட்டின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் சுரபொங் டொவிசக்சைகுள் தமது ஆதரவு முழுமையாக இலங்கைக்கு வழங்கப்படும் என்ற உறுதியினை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் வழங்கினார். தாய்லாந்து பிரதமர் வின்லக் சினவத்ராவின் விசேட பணிப்புரையானது இலங்கைக்கு தமது ஆதரவை வழங்குவதாகும். அதேவேளை, கற்றறிந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாகவும் கூறியதை அவர் அங்கு நினைவுபடுத்தியதாக ஜெனீவாவிலிருந்து அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452