இனி என் மகளோடு...
ரெண்டும் என் இல்லாம்பில்லிகள்
தேடிக் கத்துங்கள் என்னை
ஓரமா காத்தடிச்சா
பேயெண்டு நெனச்சிப் பயருங்கள்
மூலை முடுக்கெல்லாம் ஓடித்திரியுங்கள்
கதவையும் பூட்டால் பூட்டி வந்திற்றம்
கரண்டு போனா இருட்டுக் கசம்தான்
கண்ணும் தெரியாது
வாயும் பேச ஏலாது
பசிச்சா என்ன செய்யுங்களோ
அதுகளையும் கூட்ட வந்திருக்கலாம்
பகலைக்கெல்லாம் என்னோடிருப்பவர்கள்
அதுகளை விட்டுட்டு வந்தது
கவலையா இருக்கு
ரெண்டும் சண்டை பிடிச்சா
யார் சமாதானப் படுத்துவதோ?
எனக்கு இங்கிருக்கும்
கிறுக்கூஞ்சல் பிடிக்கல்ல
சறுக்கு விளையாட்டுப் பிடிக்கல்ல
விளையாட்டுப் பொருட்களும் தேவல்ல
இந்த சிறுவர் தினக் கொண்டாட்டம்
பிடிக்கவே பிடிக்கல்ல
கெதியாப் போவம் என்றாள்
இனி என் மகளோடு
இந்தப் பொம்மைகள் ரெண்டையும்
எடுத்துச் செல்வதென முடிவெடுத்தேன்.