எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Friday, May 23, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, February 12, 2012

பதுளையில் நண்பகலில் கல்லெரியும் பேய்; மக்கள் பீதி

Print Friendly and PDF


பதுளை அமுனுவெல்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள கஜுவத்தை என்ற கிராமத்தில் பேய் உலவுவதாக பேசப்படுகிறது. இக்கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு நண்பகல் வேளைகளில் கல்விழும் சம்பவம் தொடர்பிலேயே இந்த பேய் பயம் ஏற்பட்டுள்ளது. கஜுவத்தை கிராமத்தில் உள்ள நபர் ஒருவர் ஒரு மாதத்திற்கு முன்னர் பலாமரம் ஒன்றில் தூக்கிட்டு மரணமானார்.

இதனை தொடர்ந்து குறித்த நபரின் 7ஆம் நாள் தானம் வழங்கும் நிகழ்வை தொடர்ந்தே இந்த கல்விழும் சம்பவம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த சம்பவம் பேய் வேலை என்று கிராம மக்கள் நம்புகின்றனர். பல வீடுகளுக்கு கல் விழுவதாக ஒரு மாதத்திற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த நிலையை தற்சமயம் மாறியுள்ளது.

தற்போது ஒரு வீட்டுக்கு மாத்திரமே கல்விழும் சம்பவம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. தானம் வழங்கிய வீட்டிற்கே முதலில் கல்விழும் சம்பவம் இடம்பெற்றதாக அறியவந்ததுடன் இதன் காரணமாக குறித்த மரணமானவரின் மனைவி அந்த வீட்டை விட்டு வெளியேறினார். எனினும் தற்கொலை செய்து கொண்டவரின் மனைவி இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் மரணமானவருக்கு எதிரிகள் இந்த கிராமத்தில் இருப்பதாகவும் அவர்கள் ஒருநாள் தமது வீட்டுக்கு கல் எறிந்ததாகவும் குறிப்பிட்டார். இந்த சம்வத்தின் பின்னிலையில் ஒரு குடும்பம் இருப்பதாக அவர் சந்தேகிக்கிறார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பதுளை காவல் துறையினர் விசேட குழுவென்றை அமைத்துள்ளதுடன் அவர்கள் கல் விழுவதாக கூறப்படும் வீட்டை சோதனை செய்துள்ளனர். அங்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்த சமயமும் குறித்த வீட்டின் கூரையின் மீது கல் விழுந்துள்ளது. இந்த கல்வீச்சு சம்பவத்தை குறித்த ஒரு குழுவினரே மேற்கொள்கின்றனர் என்பது குறித்து காவல்துறையினருக்கு இதுவரையிலும் அறிந்துகொள்ள முடியாதுள்ளது. இது தொடர்பில் விசேட காவல்துறை குழுவொன்று அமைக்கப்பட்டு விசேட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452