எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Wednesday, July 23, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, February 22, 2012

வெளிநாட்டு வக்கீல்களுக்கு இந்தியாவில் தடை

Print Friendly and PDF


(இந்தியாவிலிருந்து சாஹுல்) 
வெளிநாட்டு வக்கீல்கள் இந்திய கோர்ட்டுகளில் ஆஜராகி வாதாட சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. ஐகோர்ட்டில் வக்கீல் பாலாஜி தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது, அமெரிக்கா உள்பட வெளிநாடுகளைச் சேர்ந்த வக்கீல்கள் இந்திய கோர்ட்களில் தற்போது வழக்குகளில் ஆஜராகி வாதாடி வருகிறார்கள். இது இந்திய பார்கவுன்சில் சட்டத்துக்கு விரோதமானது. இந்திய பார்கவுன்சில் சட்டப்படி இங்குள்ள பார்கவுன்சில்களில் பதிவு செய்துள்ள வக்கீல்கள் மட்டுமே இந்திய கோர்ட்களில் வாதாட முடியும். இதை மீறி வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் சட்ட ஆலோசகராக வெளிநாட்டில் பதிவு செய்துள்ள வக்கீல்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

அவர்கள் இந்திய கோர்ட்களில் ஆஜராகி வருகிறார்கள். இது தவிர வெளிநாட்டில் பதிவு செய்துள்ள வக்கீல்கள் இந்தியாவில் சட்டநிறுவனங்களும் தொடங்கி வருகிறார்கள். இதுவரை 30க்கும் மேற்பட்ட சட்டநிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி உள்ளன. இதற்கு தடை கோரி மத்திய அரசுக்கு மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வெளிநாட்டு வக்கீல்கள் இந்தியாவில் பணியாற்ற தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு கடந்த மாதம் இறுதி விசாரணை நடத்தப்பட்டது. மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல் சுந்தரேசன், மத்திய அரசு சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன், மத்திய அரசின் மூத்த வக்கீல் பி.சந்திரசேகர் ஆகியோர் ஆஜரானார்கள். இதை தொடர்ந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இதில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பு விவரம்: வெளிநாடுகளில் சட்டம் படித்தவர்கள் இந்திய கோர்ட்களில் வாதாட அனுமதிக்க முடியாது. பார்கவுன்சில் சட்டப்படி இந்தியாவில் படித்து பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்திய கோர்ட்களில் ஆஜராகி வாதாட முடியும். 

இந்த சட்டம் சரியானது தான். வெளிநாட்டில் படித்தவர்கள் இந்திய கோர்ட்களில் வாதாடினால் அவர்கள் மீது பார்கவுன்சில் நடவடிக்கை எடுக்கலாம். வெளிநாட்டு கம்பெனிகளுக்கு இங்கு சட்டப்பிரச்னை ஏற்பட்டால் அதற்கு ஆலோசனை மட்டும் வழங்க வெளிநாட்டு வக்கீல்களுக்கு உரிமை உள்ளது. அதற்கு அனுமதி கொடுக்கிறோம்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452