எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Sunday, June 15, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, January 23, 2012

இலங்கை எழுத்தாளர் ஷெஹானுக்கு ஜெய்ப்பூர் இலக்கிய விருது

Print Friendly and PDF


ஷெஹான் கருணாதிலக்க 2008ஆம் ஆண்டில் சைனாமேன் நாவலுக்காக கிரேஷ்யன் பரிசிலையும் வென்றுள்ளார். சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்கவின் சைனாமேன் என்ற நாவல் இம்முறை 2012ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் தெற்காசிய இலக்கியத்துக்கான 50 ஆயிரம் டாலர்கள் பெறுமதியான பணப்பரிசிலை வென்றுள்ளது.

கிரிக்கெட்டில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஒருவரை, குறிப்பாக ‘சைனாமேன்’ என்று விளிக்கப்படுகின்ற வித்தியாசமான திறமை கொண்ட கிரிக்கெட் வீரரை மையப்படுத்தி ஷெஹான் கருணாதிலக்க இந்த நாவலை எழுதியிருந்தார். பிரதீப் சிவநாதன் மெத்தீவ் என்ற வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையை விளையாட்டுச் செய்தியாளர் ஒருவர் எப்படி தேடி ஆராய்கிறார் என்று கதை நகர்ந்து செல்கின்றது.

கடந்த 50 ஆண்டுகாலத்தில் சிவில் யுத்தத்தாலும் வேறுபல பிரச்சனைகளாலும் இலங்கையின் வளங்கள் வீணடிக்கப்பட்டு விட்டன என்ற தொனி வெளிப்பட, குறித்த கிரிக்கெட் வீரர் மற்றும் அவர் பற்றி தேடும் விளையாட்டுச் செய்தியாளர் போன்ற விசேட திறமையாளிகளையும் நாடு மறந்துவிட்டது என்ற கவலையை வெளிப்படுத்தும் விதமாக ஷெஹான் கருணாதிலக்க தனது நாவலை படைத்திருக்கிறார்.

இந்த நாவல் கொழும்பைத் தாண்டி இந்தியாவரை பயணிக்கும் என்று தான் எதிர்பார்த்திருக்கவில்லை என்று கூறிய எழுத்தாளர், இவ்வாறான விருதுகளால் இலங்கை எழுத்தாளர்கள் ஊக்கமடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தின் முடிவில் பல கதைகள் பேசப்பட வேண்டியிருப்பதாகவும் தொடர்ந்தும் இலங்கை எழுத்தாளர்கள் இவ்வாறான படைப்புகளை வழங்குவார்கள் என்றும் ஷெஹான் நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கையில் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை, ஊடகவியலாளர்கள் நடத்தப்படுகின்ற விதம் என்பன குறித்து கவலைப்படுவதாகவும் தற்போது சிங்கப்பூரில் வசித்துவரும் இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க தெரிவித்தார்.

Related News

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452