எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Friday, June 06, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, January 25, 2012

மாண்புறும் மக்கள் தொண்டன் தேசகீர்த்தி ஏ.எல். இப்றாலெப்பை (SLAS)

Print Friendly and PDF


அட்டாளைச்சேனை வழங்கிய அருந்தவப் புதல்வர்களில் அஹமட்லெவ்பை இப்றாலெவ்வையும் ஒருவர். இவர் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்தியதன் விளைவாக சமூக சேவை அமைச்சினால் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் சிறந்த பிரஜையாக அண்மையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் 1932.07.15இல் பிறந்து அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் ஆரம்பக்கல்வி கற்று 1943ஆம் ஆண்டில் தரம் 5புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தன் மூலம் இடைநிலைக் கல்வியை ஆங்கில மொழி மூலம் மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிஷன் வித்தியாலத்தில் கற்று 1952இல் ஆங்கில ஆசிரியராக அரசசேவையில் இணைந்து கொண்டதன் பின்னர் 1956ஆம் ஆண்டில் பேராதனை விவசாயக் கல்லூரியில் இரண்டாண்டுகள் விவசாய டிப்ளோமாவையும் முடித்தார்.

கல்லோயா பிரதேசக் குடியேற்ற அதிகாரியாகவும், கமநல சேவைத் திணைக்களத்தில் பெரும்பாக உத்தியோகத்தராகவும் சேவையாற்றிபோது 1980ஆம் ஆண்டில் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை நிருவாக சேவை பரீட்சையில் ஆங்கில மொழி மூலம் அம்பாறை மாவட்டத்தில் முதன் முதலாக சித்தியடைந்து சாதனை படைத்தார்.

பின்னர் அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் கமநலச்சேவை உதவி ஆணையாளராகவும், 1987தொடக்கம் 1993ஆண்டுவரை நிந்தவூர் உதவி அரசாங்க அதிபராகவும், பிரதேச செயலாளராகவும் சேவையாற்றி 41வருட அரசசேவையிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு காலத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். மன்சூரின் இணைப்புச் செயலாளராகவும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாக ஆலோசகராகவும், தற்போது கிழக்கு மாகாண அமைச்சர் கௌரவ எம்.எஸ். உதுமாலெவ்வையின் பிரத்தியேக நிர்வாக உத்தியோகத்தராகவும் கடமையாற்றி வருகின்றார்.

அகில இலங்கை சமாதான நீதவானாகவும், தேசகீர்த்தி, தேசமாணி ஆகிய பட்டங்களையும் பெற்ற யுடு. இப்றாலெப்வை அவர்கள் மஸ்ஜிதுல் பத்ர் பள்ளிவாசல் தலைவராகவும், கிராம அபிவிருத்திச் சங்க போசகராகவும் அட்டாளைச்சேனை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தலைவராகவும், கிழக்கிலங்கை அறபுக் கல்லூரி உபதலைவராகவும் சேவையாற்றி வருவதுடன் கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து சத்தியப் பிரமாணம் பெற்ற மொழி பெயர்ப்பாளராகவும் சிறப்பான பணிகளை ஆற்றிவருகின்றார். இவருக்கு சிறந்த பிரஜையாக தெரிவு செய்தமையிட்டு பல்வேறு அமைப்புக்கள் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கின்றன. துருவம் சார்பாக நாமும் வாழ்‌த்துகிறோம்.

தகவல்: தென்கிழக்கு துருவம் செய்தியாளர்

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452