எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Monday, July 14, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, February 24, 2012

அரசாங்கமும் மக்களை ஆர்ப்பாட்டத்துக்கு அழைக்கிறது

Print Friendly and PDF


ஐ.நா. மனித உரிமைகள் சபை கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 27ஆம் திகதி நாட்டிலுள்ள சகல பிரதான நகரங்களிலும் நடைபெறவுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை பெப்ரவரி 27ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கூடும்போது, இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நாடுகள் முன்வந்துள்ளன. இலங்கைக்கு எதிரான யோசனைகளுக்கு இலங்கை மக்களின் எதிர்ப்பை வெளியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.

இந்த யோசனைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அரசுக்கு ஆரவளிக்கவும், 30 வருடங்களாக நாட்டின் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வை அழித்தது மட்டுமன்றி அரச தனியார் சொத்துக்களை சேதமாக்கி தேசிய பொருளாதாரத்தின் பிரதான முதலீட்டு தளங்களை சீர்குழைத்து நாசப்படுத்த செயற்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக செயற்படும் புலி ஆதரவாளர்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்கவும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும்.

மிலேச்சத்தனமான விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் வெளிநாடுகளில் இருப்பவர்களால் இலங்கை அரசுக்கும், மக்களுக்கும் எதிராக மேற்கொள்ளப் படும் செயற்பாடுகளுக்கு இலங்கை மக்களின் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு ஸ்ரீ.ல.சு.க. உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளும் தீர்மானித்துள்ளன.

பெப்ரவரி 27ஆம் திகதி காலை நாட்டின் சகல பிரதான நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஸ்ரீல.சு.கட்சியும், ஐக்கிய மக்கள் சநத்திர முன்னணியும் தீர்மானித்துள்ளன. பிரதேச மட்டத்தில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றுமாறு ஸ்ரீ.ல.சு.கட்சி இலங்கை மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

ஆக மொத்தத்தில், இது ஒரு ஆர்ப்பாட்டமான மாதம்தான்.

Related News

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452